வெள்ளி, 8 மே, 2026
தமிழே உயிர்
தாயென் உயிர் என்றால் தமிழும் உயிரே
சேயென் நாவில் எழுதிய அழகு மொழியே
வாயென் உயிரோடு இணைந்தே இருந்திடு எந்நாளும்
ஓயேன் புகழ்பாட ஒருநாளும் தாயே தமிழே !
மூத்த மொழியே உலகின் முதல் மொழியே
காத்து நிற்போம் நின் பெருமை எந்நாளும்
சங்கம் வளர்த்த தமிழே தொன்மை மொழியே
எங்கள் உணர்வோடு உறைந்த பெருமை பாட இனியவளே இயல் இசை நாடகம் ஆனவளே
கனியெனத் தித்திக்கும் கணக்கில் அடங்கா பாடல்கள்
காலம் கடந்த முதல் இலக்கண நூலே
காத்து பலகாலம் வளமாய் எம்மோடு கொண்டோம்
யாரும் உன்னை அழித்திட இயலாது அணைத்துக் காப்போம்
பேரும் புகழும் உலகில் என்றும் நிலைக்கும்
உனது புகழ் பாட ஒருநாள் போதுமா
மனதில் மகிழ்வு பெருகும் வரிகள் வளமாகும்
குறட்பா நாலடி அகநாநூறு புறநாநூறு எட்டுத் தொகை
குறையாத வகைகள் எண்ணில் அடங்கா நூல்கள்
வாழ்வின் நெறிகள் காதல் கல்வி ஈகை
வாகை சூடல் மனை மாட்சி மங்கலம்
எத்தனை எத்தனை புதைந்த இலக்கிய பெட்டகங்கள்
இன்று ஒருநாள் போதாது பெருமை பாட
என்றும் உன் நினைவில் வாழ்வோம் தாயே !
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக