வெள்ளி, 8 மே, 2026
தூறலில் நனையும் நினைவு
தூறலில் ஏன் நினைவு நனைய வேண்டும்
தூக்கம் வராமல் யோசித்தேன் புரியாமலே
வாரம் தோறும் வரும் தலைப்பே
காரம் கொஞ்சம் இனிப்பும் கொஞ்சம்
கதம்ப மாலை ஒன்று போதும்
கதைகள் சேர்க்க கற்பனை வேண்டுமே
மூளைக்குச் சலவை செய்கிற நேரம்
வேளைக்குப் பாட்டெழுத கவிஞனா நான்
கற்பனை கடையில் விற்கிற சரக்கா
விற்பனை அமோகமா நடக்கும் அப்போது
வாங்கத் தான் செல்கிறேன் வகையாய்
வாங்கி வர வருவீரோ நீரும்
பாங்காய் இரண்டு வாஙகலாம் தானே
தூற்றாமல் இருந்தாலே போதும் ஐயா
காற்றோடு போகாமல் காத்து விடலாம்
எண்ணத் தூறல்களில் நனைந்த நினைவுகள்
என்றோ தொலைந்ததை நினைவூட்டும் தூறல்கள்
மனதின் ஆழத்தில் உறைந்து போனவை
கனவாய் சிலநேரம் உறக்கம் துறக்கும்
கற்பனை வானில் பறந்து திரியும்
பற்பல வகையாய் வண்ணப் பூச்சாய்
எல்லைகள் அற்றது எங்கும் உலவும்
தொல்லைகள் யார்க்கும் அதனால் இல்லை
சோகமும் சுகமும் கலந்த கலவை
மோகமும் கூட நினைவில் வரலாம்
கரை தொடும் அலை போல்
கனவு தொடும் நினைவு ஆகும்
மனந் தொடும் எண்ண அலைகள்
தினந் தோறும் வந்து போகும்
மற்றவர் பார்க்காமல் கண் கசியும்
உற்றவர் பிரிந்த சோகம் தாக்கி
தொலை தூரம் என்றாலும் செல்லும்
விலை இல்லா பயணம் அதுவே
நினைவு என்பதே பறவை போன்றே
நிற்காது பறந்து செல்லும் வானில் தூறல்கள் அங்கொன்றும் இங்கொன்றுமாக என்றும்
மனதின் பரப்பை நனைத்துப் போகும்
நினைவுகள் அதனில் நனைந்து ஈரமாகும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக