வெள்ளி, 8 மே, 2026
எங்கே போனாயோ
எங்கே போனாயோ தேடிக் களைத்தேன்
எத்தனை நாளோ உன்னைப் பிரிந்து
வாடிய மனம் துவண்டே போனதே
தேடியே கால்கள் தேய்ந்தே போனதே
பாடித் திரிந்த பழைய நாட்கள்
ஓடித் திரிந்த வயல் வரப்புகள்
காலை நனைத்த ஆற்று நீர்
மாலைக் கதிரவன் ஒளியில் உன்முகம்
மறக்க இயலா வண்ணக் கனவுகள்
உறக்கம் மறந்த பலப்பல இரவுகள்
வருவாய் எனவே ஏங்கிய நாட்கள்
வ்ந்திடு வாயா விரைவில் பெண்ணே
இன்றோ நாளையோ எண்ணித் தவிக்கும்
இதயம் அறிந்து வந்து சேர்ந்திடு
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக