வெள்ளி, 8 மே, 2026
எதிரே சில கோமாளிகள்
கோமாளிகள் நிறைந்த உலகமடா நண்பா
ஏமாளிகள் மக்கள் என்பதும் உண்மை
மயக்க நிலையில் மந்தமாய் மந்தையாய்
தயக்கம் இல்லாத பொய்யின் மடியில்
வியப்பாய் இவரின் பேச்சும் செயலும்
நயமாய்ப் பேசும் நய வஞ்சகர்
மழுங்கிய மூளை மூடச் சிந்தனை
தழுவிய பாதையோ சாக்கடை ஓட்டம்
எப்போது மாறுவர் என்பதே கவலை
தப்பான வழியில் தவறிப் போயினர்
பேசும் பேச்சில் உண்மை இல்லை
காசுக்காய் செய்யும் போக்கிரித் தனம்
பொறாமை ஒவ்வொரு கணமும் மனதில்
பொல்லாத மனிதர் இவர்கள் குழுவாய்
அடுத்தவர் வாழ்வில் நெருப்பைக் கக்குவர்
அடுத்தே இருந்து குழியும் பறிப்பர்
நல்ல பயிரின் நடுவே களைகளாய்
நச்சு கலந்த பாலின் குணமாய்
அட்டைப் பூச்சி உறியும் இரத்தமாய்
அழித்தே விடுவர் அனைவரின் வாழ்வை
கோமாளிகள் போலவே வித்தைகள் கற்றவர்
ஏமாளிகள் இல்லை ஏமாந்து விடாதீர் வன்மம் மனதில் வக்கிரம் கூடவே
ஜென்மம் ஆயிரம் எடுத்த போதிலும்
புத்தியே மாறாத நரியின் கூட்டமே
உத்தமர் வேடம் பொருந்தச் செய்வர்
சித்தம் கலங்கிடும் சினம் மேலோங்கும்
எத்தர் கூட்டம் எப்போது ஒழியும்
எத்தனை காலமோ இதனைப் பொறுப்பது
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக