வெள்ளி, 8 மே, 2026
என்னை ஏன் திருடினாய்
காதலன் கேட்கும் கேள்வி காதலி பார்க்கும் பார்வை
காதிலே பல காலம் கேட்ட சொல் தொடர்
திருடிய வனுக்கும் திருடப் பட்ட வளுக்கும் இடையே
வரும் சொல்லில் கொஞ்சல் தூக்க லாய் தோணும்
ஆற்று நீர் கேட்டது அருகில் உள்ள கால்வாயை
ஊற்று நீர் கேட்டது உயர்ந்த மணற் கேணியை
சிலையான பெண்ணை மலை கேட்டது ஏனோ திருடினாய்
வலையில் சிக்கிய மீனும் உயிர் நீக்கும் முன்னே
மானும் புலியிடம் இரத்தம் சிந்திய பார்வை யாலே
வானும் தாரகைக் கூட்டம் கண் சிமிட்டல் கண்டு
திருடர் கூட்டம் பெருகிப் போனது தீர்வு இல்லை
திருட்டு குற்றம் என்ற போதும் குறைவே இல்லை
அலைகள் கடலைத் திருடி கால்கள் வருடிச் சென்றன
மலைகள் மேகம் தழுவி கற்பைப் பறித்துச் சென்றன
வண்டோ மலரின் இதழைச் சுவைத்து கலவி செய்தது
பண்பு இல்லா செயல் எனச் சாடல் இயலுமோ
வழக்கு பதிய மன்றம் எங்கே உள்ளது சொல்வீரா
வழிவழி வந்த திருட்டு பலவும் நிலுவையில் இன்றும்
வாதாட வக்கீல் இல்லை வாதம் மட்டும் உண்டு
ஏதாவது செய்க இதனைத் தடுக்க இத்தனை காலமா
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக