வெள்ளி, 8 மே, 2026

என்னை ஏன் திருடினாய்

காதலன் கேட்கும் கேள்வி காதலி பார்க்கும் பார்வை காதிலே பல காலம் கேட்ட சொல் தொடர் திருடிய வனுக்கும் திருடப் பட்ட வளுக்கும் இடையே வரும் சொல்லில் கொஞ்சல் தூக்க லாய் தோணும் ஆற்று நீர் கேட்டது அருகில் உள்ள கால்வாயை ஊற்று நீர் கேட்டது உயர்ந்த மணற் கேணியை சிலையான பெண்ணை மலை கேட்டது ஏனோ திருடினாய் வலையில் சிக்கிய மீனும் உயிர் நீக்கும் முன்னே மானும் புலியிடம் இரத்தம் சிந்திய பார்வை யாலே வானும் தாரகைக் கூட்டம் கண் சிமிட்டல் கண்டு திருடர் கூட்டம் பெருகிப் போனது தீர்வு இல்லை திருட்டு குற்றம் என்ற போதும் குறைவே இல்லை அலைகள் கடலைத் திருடி கால்கள் வருடிச் சென்றன மலைகள் மேகம் தழுவி கற்பைப் பறித்துச் சென்றன வண்டோ மலரின் இதழைச் சுவைத்து கலவி செய்தது பண்பு இல்லா செயல் எனச் சாடல் இயலுமோ வழக்கு பதிய மன்றம் எங்கே உள்ளது சொல்வீரா வழிவழி வந்த திருட்டு பலவும் நிலுவையில் இன்றும் வாதாட வக்கீல் இல்லை வாதம் மட்டும் உண்டு ஏதாவது செய்க இதனைத் தடுக்க இத்தனை காலமா

கருத்துகள் இல்லை: