வெள்ளி, 8 மே, 2026
மாற்றம் வருமா
மாற்றம் வேண்டி யாரிடம் செல்வேன்
மாற்றுப் பாதையை காண்பது எளிதா
சோற்றுக் கனவில் உறங்கும் மனிதர்
காற்றுப் புகாத குடிசை வாசிகள்
நேற்றுப் பெய்த மழையின் ஈரம்
வற்றாத நதிகள் வறண்ட மணலாய்
நூற்றுக் கணக்கில் வறுமைச் சூழல்
பெற்ற சுதந்திரம் சுவாசம் சேராமல்
கற்றவர் இருந்தும் கல்லாய் மனது
ஏற்றத் தாழ்வில் ஏழ்மை கொடியதாய்
உற்றுப் பார்த்தால் உண்மை புலப்படும்
வெற்றுத் தாளில் கரும்புள்ளி அதுவே
சுற்றிப் பார்த்தேன் சுருங்கி உடல்கள்
சுற்றம் அவரும் சூழ்நிலை வேறாய்
மாற்றம் வருமா கேள்வி மீண்டும்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக