வெள்ளி, 8 மே, 2026
பிலிப்பைன்ஸ்
(25/02/2025 & 26/02/2025)
இந்த முறை நண்பர்கள் ஐந்து, கல்லூரி நண்பர்கள் மூன்று, பெங்களூர் நண்பர் பிரகாஷ் மற்றும் ஒன்று விட்ட சகோதரர். மூன்று மாதங்களுக்கு முன்பே ஆரம்பித்து, விமான பயணச்சீட்டு, பிலிப்பைன்ஸ் சுற்றிப் பார்க்க பயண ஏற்பாட்டாளர் என ஒவ்வொன்றாக பேசி முடித்து, பயணச் செலவை தோராயமாக முடிவு செய்து நண்பர்களுடன் கலந்தாலோசித்து, ஒவ்வொன்றாக, முன் பதிவும் செய்து, பயணத்திற்கான நாளும் வந்தது.
சென்னையிலிருந்து ஐவரும் புறப்படுவது என்றும், Cebu விலிருந்து திரும்பும் போது இருவர் பெங்களூரு மூவர் சென்னை என்பதும் முடிவானது.
அந்த நாளும் வந்தது, 25/02 காலை மைசூர் சென்னை எக்ஸ்பிரஸில் 7 50க்குப் புறப்பட்டு, சென்னையை மதியம் 2 மணி அளவில் அடைந்தபோது அசோக் லால்பாக்காக திரும்பும் நாங்கள் வந்த டிரெயினுக்குக் காத்திருந்தார். அவரோடு பேசி காப்பி சாப்பிட்டு, நண்பர் பிரகாஷுடன் , டாக்ஸியில் பயணித்து, ஈக்காட்டுத் தாங்கல் சிவராஜ் வீடு அடைந்த போது நான்கு மணியானது.
அவருடன் பேசிக் கொண்டிருந்த போது சம்பந்தமும் அண்ணாநகரிலிருந்து புறப்பட்டு என்னைப் பார்க்க வந்திருந்தார். சூடான இட்லி, சட்னி தயாராய் சமையல் அம்மா செய்ததை ருசித்துச் சாப்பிட்டு, எட்டு மணிக்கு மேல் ஓலா டாக்ஸியில் புறப்பட்டு, ஏர் போர்ட் பயணம், செக் இன் செய்து, ஐந்து பேரும், சிங்கப்பூர் விமானத்திற்காகக் காத்திருந்தோம். பிலிப்பைன்ஸ் மணிலா விமான டிக்கெட், சென்னை சிங்கப்பூர்,சிங்கப்பூர் மணிலா இரண்டிற்குமான விமான டிக்கெட்டும் சென்னையிலேயே.
விமானம் புறப்பட்டு கடல் கடந்து சிங்கப்பூரைத் தொட்டபோது விடிந்திருந்தது.நேரமும் இரண்டரை மணி நேரம் கூடியிருந்தது. அதிகக் காத்திருப்பு இல்லாமல், மணிலாவை நோக்கிப் பயணம் மீண்டும். இரவு உணவு நள்ளிரவு, தூக்கமின்மை எல்லாம் சேர்ந்து வயிறு கடமுடா செய்தது. ஒரு வழியாக மணிலாவில் தரை இறங்கிய போது காலை பதினொரு மணி.
இமிக்ரேஷன் முடித்து வெளியே வந்தபோது, Kalm Travels, Ana அவரது கணவருடன் காத்திருந்தார்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக