அறுபதுக்கு மேலே வாழ்வதே வரமாம்
பெறுவது நல்ல அறிவுரை பலவாம்
நறுமணம் நாரும் மலரிடம் பெறுமாம்
உறுதுணை உற்றவர் நட்பு பலவும்
உறுதியாய் உள்ளம் இருப்பதே நலமாம்
காற்றுள்ள போதே தூற்றுதல் செய்வோம்
பற்றுள்ள மனங்கள் பாசமும் நல்குமாம்
நற்றிணை ஆற்றின் நன்மை பயக்கும்
சேற்றிலே விளைவதே தாமரை மலரும்
நேற்றைய நினைவுகள் நெஞ்சினில் நிறையும்
பெற்றிட்ட செல்வம் பெருமை சேர்க்கும்
கற்றவை அனைத்தும் உறுதுணை ஆகும்
நற்றமிழ் நாதம் நாளும் ஒலிக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக