புதன், 17 ஜனவரி, 2024

உயர்ந்த மனிதரே

 விழித்தேன் பல காலம் முன்பே

விழிக்காத சிலரைக் கண்டேன் இன்றும்
பொய்யர் பெரியராய் ஏய்த்தே வாழ்வர்
பொல்லாத மனிதர் மயக்க நிலையில்
உயர்ந்த ஏணியை உதைக்கும் கால்கள்
உயிரற்ற பிணமாய் நடமாடி நின்றே
சாதிகள் வேண்டாம் சமநிலை வேண்டும்
சாற்றியது தவறா புத்தியை தீட்டு
பெண்மையைப் போற்றிடும் காலம் தவறா
பெண்டிரை சமமாய் மாற்றியது பிழையா
உறங்கிய உண்மைகள் வெளிச்சம் கண்டன
உதவாத சிலரால் பேதங்கள் மீண்டும்
மறவாதே மானிடா அடிமை வாழ்வை
பிறப்பால் அனைவரும் உயர்ந்த மனிதரே

கருத்துகள் இல்லை: