விழித்தேன் பல காலம் முன்பே
விழிக்காத சிலரைக் கண்டேன் இன்றும்
பொய்யர் பெரியராய் ஏய்த்தே வாழ்வர்
பொல்லாத மனிதர் மயக்க நிலையில்
உயர்ந்த ஏணியை உதைக்கும் கால்கள்
சாதிகள் வேண்டாம் சமநிலை வேண்டும்
சாற்றியது தவறா புத்தியை தீட்டு
பெண்மையைப் போற்றிடும் காலம் தவறா
பெண்டிரை சமமாய் மாற்றியது பிழையா
உறங்கிய உண்மைகள் வெளிச்சம் கண்டன
உதவாத சிலரால் பேதங்கள் மீண்டும்
மறவாதே மானிடா அடிமை வாழ்வை
பிறப்பால் அனைவரும் உயர்ந்த மனிதரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக