விடியக் காத்திருந்த இரவை இருட்டாக்கி கொண்டாடுது
விட்டில் பூச்சிகள் நெருப்பில் அழிய ஆட்டம்போடுது
கோவணம் கட்டித் தெருவில் திரிய நினைக்குது
பாவமாய் இருக்குது படித்த முட்டாளும் இதிலடங்குது
சரித்திரம் திரும்புது சண்டியர் சண்டாளர் தலைமையில்
நல்லது அழிந்து நரகமாய் மாறிடத் துடிக்குது
நசுங்குது பொசுங்குது மனிதம் என்ற நற்குணம்
இருளின் ஆட்டம் இரையாக்கி நகைக்குது நாட்டிலே
இறைவன் பெயரால் இரக்கமில்லா கும்பலின் குத்தாட்டம்
எத்தனை காலம் ஆகுமோ வெளிச்சம் கண்டிட
பி்த்தனாய் பிதற்றியே தினமொரு கவிதை ஏட்டிலே !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக