ஏலே சேட்டு மடைய மாத்துடா
ஏனோ மழைய காணலே இதுவரை
கிணறு தண்ணி வத்தி போச்சு
கிச்சிலி சம்பா நாத்து தப்புமா
ஏம்லே வருஷம் தோறும் இப்படி
கயலு ஸ்கூலு பீஸு. கட்டணும்
கம்மல் வச்சு காசு வாங்கியா
கடல புண்ணாக்கு உமியும் கொஞ்சம்
கறவை மாட்டுக்கு வைக்கோல் வேணும்
உழவ நம்பி வாழற வாழ்வு
உச்சு கொட்டியே நாளும் போகுது
விடியற நேரம் விரச போகணும்
விதைச்ச கழனிக்கு தண்ணி பாச்சணும் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக