கற்பனை உலகே அத்தனை அழகு
விற்பனை இல்லை விலையும் இல்லை
பற்பல பதவிகள் என்பதே இல்லை
சொற்களில் நேர்மை செய்கையில் இரக்கம்
கற்றதும் கேட்டதும் கண்டதும் நல்லவை
பற்றது துறந்து முனிவராய் அல்ல
பற்றுடன் பண்பும் அன்பும் இணைந்து
உற்றவர் அனைவர் உள்ளத்தில் தூய்மை
வேற்றுமை அற்ற மனிதர் எங்கும்
ஒற்றுமை ஒன்றே வாழ்வில் உண்டு
கற்றிட கல்வி கட்டணம் இல்லை
வற்றிய குளங்கள் வளமான ஏரிகளாய்
சுற்றி ஓடும் நதிகள் நாடெங்கும்
வெற்று வேதம் பேசுவோர் இல்லை
காற்றில் மாசு மறைந்து போனது
கற்றவர் நிறைந்த கிராம சபைகள்
சொற்சுவை ஆடல் பாடல் தினமும்
கற்பனை தானே அளவில்லை எதற்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக