புதன், 17 ஜனவரி, 2024

கண்களுக்கு இனிமை

 எத்திசை நோக்கினும் பசுமைப் போர்வை

எல்லைகள் மலைகளாய் உயர்ந்த காட்சி
ஆறொன்று அமைதியாய் வளைந்தோடும் அழகு
ஆவாரஞ் செடிகளி்ல் அழகான பூக்கள்
புற்களின் நுனிகளில் வெண்பனித் துளிகள்
புள்ளினம் பலவும் மரங்களின் கிளைகளில்
இளங்காலைக் குளிருடன் வீசிடும் காற்று
இதயத்தை வருடிச் சென்றிடும் விடியல்
தூரத்தே பாலெனக் கொட்டும் அருவி
தூறலில் புகுந்த ஒளியின் கீற்று
கதிரவன் வரவில் தங்கமாய்த் தோன்றும்
புதியதோர் காலையும் பிறந்திடும் அழகாய்
இயற்கை என்றாலே கண்களுக்கு இனிமை
இதயம் சேர்ந்து இசைமழை ஆகும்

கருத்துகள் இல்லை: