எத்திசை நோக்கினும் பசுமைப் போர்வை
எல்லைகள் மலைகளாய் உயர்ந்த காட்சி
ஆறொன்று அமைதியாய் வளைந்தோடும் அழகு
ஆவாரஞ் செடிகளி்ல் அழகான பூக்கள்
புற்களின் நுனிகளில் வெண்பனித் துளிகள்
இளங்காலைக் குளிருடன் வீசிடும் காற்று
இதயத்தை வருடிச் சென்றிடும் விடியல்
தூரத்தே பாலெனக் கொட்டும் அருவி
தூறலில் புகுந்த ஒளியின் கீற்று
கதிரவன் வரவில் தங்கமாய்த் தோன்றும்
புதியதோர் காலையும் பிறந்திடும் அழகாய்
இயற்கை என்றாலே கண்களுக்கு இனிமை
இதயம் சேர்ந்து இசைமழை ஆகும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக