அலைகள் மண் நிறம் பார்த்து கரை சேர்வதில்லை
மலையில் விழும் மழைத் துளிகள் நதியாகி கடல்சேரும்
ஊருணி நீரும் ஊற்று நீரும் தாகம் தீர்க்கும்
ஊரின் எல்லை காவல் தெய்வம் கிராமம் காக்கும்
நாயும் கூட நன்றி விசுவாசம் மனிதர் மேலே
காட்டில் வாழும் மிருகம் இனத்தோடு ஒன்றி வாழும்
கூட்டில் வாழும் பறவை குஞ்சுகள் காத்து நிற்கும்
ஏட்டில் படித்த எதையும் மறக்கும் மனித மனமே
ஏளனம் பேசும் ஏய்த்து வாழும் ஏமாற்றப் பார்க்கும்
பேராசை கொள்ளும் பொறாமை கொள்ளும் பொய்யும் பேசும்
பேசுதல் எதிலும் வன்மம் சேர்க்கும் நல்லதை மறக்கும்
ஆறறிவு இருந்தும் ஐந்தறிவு மிருகமாய் மாறும் மனிதம்
ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் திருந்தா உயிரினம் உலகில்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக