உழவரைத் தலை வணங்கிப் போற்றுவோம்
உருவான நெல்மணிகள் புத்தரிசியாய் பொங்கட்டும்
கன்னலின் சுவையோடு மஞ்சளும் மங்கலமாய்
பின்னலிட்ட சிறுமியர் சிறுவர் மகிழ்ந்திட
முற்றத்தே தீயூட்டி புதுப்பானை வெண்பொங்கல்
வணங்கி நின்று வாழ்த்திடுவோம் உளம்மகிழ
வளமான வயல்வெளி ஊருணி நீர்
கதிரோனின் ஒளிக் கீற்று அனைத்தும்
கருத்தில் இருத்தி தலை வணங்குவோம்
இயற்கை தெய்வமாய் போற்றும் இந்தாளில்
இனியதொரு வாழ்த்து சொல்லி இன்புறுவோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக