புதன், 17 ஜனவரி, 2024

இனியதொரு வாழ்த்து

 உழவரைத் தலை வணங்கிப் போற்றுவோம்

உருவான நெல்மணிகள் புத்தரிசியாய் பொங்கட்டும்
கன்னலின் சுவையோடு மஞ்சளும் மங்கலமாய்
பின்னலிட்ட சிறுமியர் சிறுவர் மகிழ்ந்திட
முற்றத்தே தீயூட்டி புதுப்பானை வெண்பொங்கல்
சுற்றம் சூழ்ந்திட. வண்ணக் கோலமிட்டு
வணங்கி நின்று வாழ்த்திடுவோம் உளம்மகிழ
வளமான வயல்வெளி ஊருணி நீர்
கதிரோனின் ஒளிக் கீற்று அனைத்தும்
கருத்தில் இருத்தி தலை வணங்குவோம்
இயற்கை தெய்வமாய் போற்றும் இந்தாளில்
இனியதொரு வாழ்த்து சொல்லி இன்புறுவோம்

கருத்துகள் இல்லை: