செவ்வாய், 16 ஜனவரி, 2024

எண்ண ஓட்டம்

 அமைதி தேடி அலையும் மனதில்

அலைகள் போன்றே எண்ண ஓட்டம்
அன்பைத் தேடும் உள்ளம் ஒன்றில்
அம்மா என்ற ஒற்றை வார்த்தை
கருணை கொண்ட மனிதன் மனமோ
கடவுள் உருவில் புவியில் உண்டு
வந்ந நாளும் செல்லும் நாளும்
வாழ்வின் எல்லைக் கோடுகள் ஆகுமோ
நல்லவை கேட்டலும் நன்மைகள் செய்தலும்
நரகம் தவிர்த்திட பாதைகள் என்பர்
வாடிய பயிருக்கு வாய்க்கால் நீரும்
வாடிய வயிற்றுக்கு பசியாற உணவும்
தேடிய செல்வம் நாடியே தருமானால்
கோடிப் புண்ணியம் பெறுவது உறுதி
மக்களின் தலைவன் எவனெனக் கேட்டால்
மகிழ்வான குடிமக்கள் வாழும் நாட்டிலே
வர்ணங்கள் கடந்த மனிதம் உண்டேல்
சொர்க்க பூமி அதுவே எனலாம் !

கருத்துகள் இல்லை: