செவ்வாய், 16 ஜனவரி, 2024

கோழைகள்

 கூட்டுக்குள்ளே இருந்தே கூக்குரலிடும் கோட்டான்கள்

கூப்பாடு மட்டுமே தொழிலாய் கோழைகள்
வீட்டுக்குள்ளே வீரவசனம் பேசியே பேதைகள்
நாட்டுக்கு நலன்தேடா நாயினும் கேடாய்
தன்னலமே பெரிதான தற்குறிக் கும்பல்
இன்னல் இவருக்கு வந்தாலே தெரியும்
பரங்கியர் கால்பிடித்தே வளர்ந்த கூட்டம்
பகுத்தறிவே இல்லாத பன்றிகள் இவரோ
எரிதழல் ஒன்றில் இவர்கள் எரியட்டும்
எதற்கோ இவரெல்லாம் மானிடர் என்றே !

கருத்துகள் இல்லை: