கனவுலகில் நான் மிதந்தேன் கற்பனைகள் பல்வகையாய்
கலையாமல் பவனி வந்தேன் கற்கண்டாய் நினைவுகளில்
வளமான நாட்டினிலே வறுமை இல்லா உழவர்கள்
வயல்வெளிகள் தொழிலகமாய் வணிக வளாகங்கள் ஆனதுவே
ஊரெங்கும் கானகங்கள் மாதமெல்லாம் மழைச் சாரல்
வடக்கிருந்து தெற்கு வரை ஆற்றுப் பெருக்கு
கடலுக்குப் போகாமல் கட்டிய அணைகள் பலவுண்டு
கிராமந் தோறும் தொழிலகங்கள் உற்பத்தி பலமடங்கு
கிடையாது சாதிமதம் குலமும் தேவனும் ஒன்றே
குழுக்களாய் மக்களே ஆட்சி செய்யும் அழகு
குற்றம் அற்ற நாட்டிலே அமைதி எங்கும்
ஊழல் மறைந்தே பலகாலம் உண்மை வெற்றி
ஊரக வளர்ச்சி உலகே வியந்து பார்க்க
பசுமைப் போர்வை நீண்ட சாலைகள் எங்கும்
பகைமை அற்ற மனித உறவுகள் என்றும்
கலையாத கனவில் கண்மூடிய நேரத்துக் காட்சிகள்
கற்பனை ஆனாலும் நிஜமாகாதா என்றொரு ஏக்கம் !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக