வாடிய பயிருக்கு வயக்காட்டு தண்ணீர்
சூடிய மலர்களின் வாசமே கூந்தலுக்கு
தேடிய அமைதி கிட்டிய மனதிற்கு
பாடிய பாட்டில் மயங்கிடும் செவிகள்
ஓடிய கால்கள் ஓய்ந்த முதுமை
விடிய நாட்கள் சுழலும் உலகம்
கூடியே வாழும் பறவைக் கூட்டம்
ஓடியே இளமை செல்வம் சேர்க்கும்
நொடியே காலத்தின் கணக்கென ஆகும்
பாடிய தாளத்திற்கு ஆடிய கால்கள்
கொடிய நோய்க்கும் உணவே மருந்து
ஆடியே. அடங்கும் வாழ்வின் விளக்கம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக