மெல்ல விடியும் காலைப் பொழுது
நல்ல பாடல் ஒன்று தூரத்தே
கண்கள் திறவாமல் காதுகள் திறந்து
கற்பனை உலகில் வலம் வந்தபடி
அமைதி மனதில் ஆரவாரம் இல்லை
ஓட்டமாய் நடக்க தேவைகள் இல்லை
ஓடும் கடிகார முள் மெதுவாய்
ஆண்டுகள் கடந்த கதைகள் கோடுகளாய்
ஆலமர விழுது தரைதொடப் பார்க்குது
நாளைப் பொழுது எப்படிப் போகும்
நால்வித நினைவுகள் நாடகம் போடும்
உடல் தளர்ந்து உள்ளம் அமைதியாய்
உறக்கம் குறைந்து கால்கள் சோர்ந்து
எண்ண அலைகள் கரையைத் தேடி
எல்லை அற்ற கற்பனை உலகில்
ஓய்வு என்பதே இப்படித் தானோ
ஓயாத மனதில் ஆயிரம் வினாக்கள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக