புதன், 17 ஜனவரி, 2024

அனுபவ அறிவு

 விடிகின்ற பொழுது விதைக்கின்ற நனவும்

முடிகின்ற இரவின் முடிச்சாய் அவிழும்
வடிகின்ற வாய்க்கால் உருவாகும் மனதில்
வடிவாகும் கவிதை பதிவாகும் ஒன்றாய்
நெடிதான வாழ்வின் பக்கம் பலவும்
கடிகார முள்ளின் வட்டம் போன்றே
படிகளைக் கடந்து உயரம் தொடவும்
பிடிப்பாய் கூடவே கைப்பிடி உண்டு
துடிப்பது நிற்கும் நாள்வரை வாழ்வு
படிப்பது என்றும் அனுபவ அறிவு
கடிதான வார்த்தை தவிர்ப்பது நன்றே
நொடிதனில் மாறிடும் மானிட வாழ்வில்
செடிகளில் பூக்கும் அழகிய மலர்போல்
வடிவம் கொள்வது வாடிக்கை ஆகட்டும்

கருத்துகள் இல்லை: