தமிழின் செறிவு கண்டு வியக்கிறேன்
தமிழே தாயே போற்றி வணங்குவேன்
கற்றது கையளவே என்பதே உண்மை
பெற்ற தாயும் நீயும் ஒன்றே
நற்றமிழ் பாடிட நல்வரம் தந்தாய்
சொற்களின் பொருளோ பல்வகை பெருகி
கற்கவே நாட்கள் போதாது வாழ்நாளில்
கண்டது கேட்டது எத்தனை எத்தனை
இலக்கிய உலகில் எண்ணற்ற நூல்கள்
இருப்பவை சிலவே எரித்தவை போக
எம்மொழி அறிவை என்றும் கொள்வோம்
எந்தையும் தாயும் என்றே ஏற்போம்
கன்றது பசுவின் பாலினைப் பருகும்
கற்றலும் அதுபோல் ஞானப் பாலே
தமிழது கற்றே மொழிதனை வளர்ப்போம்
தவறாது மனதினில் நம்மொழி சேரட்டும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக