புதன், 17 ஜனவரி, 2024

கால மாற்றத்தின் கோலமிது

 மூட நம்பிக்கைகள் போலவே புனையப்பட்ட கதைகளும் ஊடுருவுதல் காலங்காலமாக நடந்தேறியுள்ளது. படிப்பறிவு பரவலாய் இல்லாத காலத்தே மக்களை ஏமாற்றுவது இலகுவாய் இருந்தது.

இதையொட்டிய விவாதங்கள் மந வேறுபாடின்றி, அவரவர் கொள்கைகளின் அடிப்படையில் தொன்று தொட்டே வளர்ந்துள்ளது. கல்வியறிவுள்ளவர்களும் நம்பிக்கையின் அடிப்படையில் ஈடுபடுவதும் இன்றும் தொடர்கதை தான்.
ஆதாரமற்ற வாதங்கள், பொய்க் கூற்றுகள் திட்டமிட்டே ஒரு சாரரால் பரப்பப்பட்டு வருகிறது. இறை நம்பிக்கை, இயற்கை வழிபாடு அவரவர் விருப்பம். அர்த்தமற்ற கூற்றுகளை ஆராய்ந்தே ஏற்றுக் கொள்ளல் வேண்டும்.
நம்பிக்கை, நாணயம், தனி மனித ஒழுக்கம், பொறுமை, இரக்கம், பிறர் நலம் விழைதல் என்பவை மிகச்சிலரால் மட்டுமே பின்பற்றப் படுவதால், வாதங்களை் முன் வைக்கவே தயங்கும் நிலை வந்துவிட்டது.
கால மாற்றத்தின் கோலமிது. சந்திரனின் நிலப் பரப்பை ஆராய்ந்து கொண்டே, கிரகணக் குளியல் போடும் மனிதர்கள் அதிகம்.
தீண்டாமை, சாதிப் பிரிவு, நிற வெறி, வறியவரை ஏளனம் செய்தல் இன்றும் தொடர்கிறது. எத்தனை யுகங்கள் வேண்டும் தெரியாது. ஆறடி நிலமும், இரத்தச் சிவப்பும் மட்டும் சமத்துவம் பேசுகின்றன.

Like
Comment
Share

கருத்துகள் இல்லை: