காணும் இடம் எங்கும் கண்ணுக்கு அழகு
காலைப் பனி புல் நுனியில் அழகு
மேயும் மானின் உடல் நளினம் அழகு
சாயும் அந்தி கதிரவன் ஒளி அழகு
இருளில் ஒளிரும் நிலவும் விண்மீனும் அழகு
வானில் தோன்றும் மேகக் கூட்டம் அழகு
வேனில் காலத்தே பூக்கும் மலர்கள் அழகு
அலைகள் கரை தொடும் கடலும் அழகு
அருவிக் குளியல் அங்கம் குளிரும் அழகு
மலையில் தோன்றும் ஆற்றின் ஓட்டம் அழகு
மயக்கும் மாலைப் பொழுதில் இசையும் அழகு
மனிதம் நிறைந்த மானிடர் வாழ்வும் அழகு
புனிதம் பிறர்க்கு உதவுதல் என்றும் அழகு
எல்லா உயிரும் சமமென எண்ணுதல் அழகு
என்றும் இறையும் இயற்கையும் போற்றுதல் அழகு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக