நேற்று வந்த சாரலிலே குளிர்ந்த காற்று
நேரில் வந்து உடல் தழுவிப் போச்சு
கிழக்கு திசைக் கதிரவன் முகம் மூடி
கிறங்கிக் கிடக்க மேகமது திரையாகி நின்றது
கூட்டைத் துறந்த பறவைக் கூச்சல் கலவை
சோம்பல் கொண்ட உடலோ கண்ணை மூடி
வீம்பாய் உறங்கப் பார்க்க வீதியிலே சத்தம்
எழுந்து சென்று நாளைத் தொடங்கச் சொன்னது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக