மதம் பிடித்த மனிதர்கள் மயக்க நிலையில்
மதம் மதம் என்ற கூப்பாடு என்றும்
மனிதம் மறந்து போனது ஏனோ மக்களே
புனிதம் மனதில் புன்னகை உதட்டில் அழகு
கடவுள் மதம் சாதி யார் படைத்தார்
பிரிவை உருவாக்கி தினம் தினம் போராட்டம்
புரியாத புதிர் நீதான் புத்தி எங்கே
அமைதி கொள் அன்பைத் தழுவி அடங்கு
அவன் அவள் அவர் எல்லாம் சமமே
வேற்றுமை பாராத வேதம் கற்றுத் தெளி
ஒற்றுமை உலகின் ஆணி வேராக்கு
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக