புதன், 17 ஜனவரி, 2024

மதம் பிடித்த மனிதர்கள்

 மதம் பிடித்த மனிதர்கள் மயக்க நிலையில்

மதம் மதம் என்ற கூப்பாடு என்றும்
மனிதம் மறந்து போனது ஏனோ மக்களே
புனிதம் மனதில் புன்னகை உதட்டில் அழகு
கடவுள் மதம் சாதி யார் படைத்தார்
கடந்து போக முடியாத பாதை வகுத்தாய்
பிரிவை உருவாக்கி தினம் தினம் போராட்டம்
புரியாத புதிர் நீதான் புத்தி எங்கே
அமைதி கொள் அன்பைத் தழுவி அடங்கு
அவன் அவள் அவர் எல்லாம் சமமே
வேற்றுமை பாராத வேதம் கற்றுத் தெளி
ஒற்றுமை உலகின் ஆணி வேராக்கு

கருத்துகள் இல்லை: