செவ்வாய், 16 ஜனவரி, 2024

யார் செய்த கோலம்

 நீர் நிறைந்த வயலில் நெல் விளையும் காட்சி

ஊர் முழுதும் பசுமைப் போர்வை விரிந்த தோற்றம்
போர் ஒன்று களத்து மேட்டில் காளைகள் பசியாற
யார் உழைப்பு உயர்ந்தது என வினா மனதில்
ஓர் உலகம் கூட்டாட்சி ஒற்றுமை என்ற ஏக்கம்
தேர் ஓடும் வீதியில் தெருக் கூத்து இரவில்
கூர் தீட்டிய மரத்தை வெட்டிய கோடரிகள் இன்று
நேர் கோடு ஒன்று வளைந்து குறுகிப் போனது
யார் செய்த கோலம் ஏனிந்த மாற்றம் கேள்வி
போர் இன்றிப் பெற்ற சுதந்திரம் மாறிப் போனதோ
நார் ஒன்று மலரை மாலையாய் மாற்றும் அழகு
ஊர் கூடி ஒன்றாய் உழைத்து வாழ்வதே பெருமை !

கருத்துகள் இல்லை: