சனி, 18 ஏப்ரல், 2020

சுற்றமும் நட்பும்

நன்றி நவிலுதல் நம்முடன் பிறந்தது
தொன்று தொட்டு இயற்கையை வணங்கிவந்தோம்
பஞ்சபூதம் முதலாய் பகுத்தறியா விலங்குவரை
நெஞ்சம் நிறைந்த மகிழ்வோடு மனங்குளிர
சுற்றமும் நட்பும் சூழ்ந்திருக்க ஊரெங்கும்
உற்சாகம் உளமெங்கும் பொங்கிட குரலெழுப்பி
மாட்டினை அலங்கரித்து மாலைசூடி வலம்வந்து
மாக்கோலம் தெருவெங்கும் மண்பானைப் பொங்கலோடு
கூக்குரல் எங்கும் குதூகலமாய் ஒளிக்க
கூடிநின்று வாழ்த்துகிற நன்னாளாம் இன்றெமக்கு
இறையடி சேர்ந்தார்க்கும் புதுத்துணி படைத்து
இதயத்து அவர்நினைவு நிறைந்து கண்பனித்திட
இருவேறு நினைவுகளில் இல்லங்கள் தோறும்
இறைவனைத் தொழுதிடும் இனிய நாளிதுவாம் !

கருத்துகள் இல்லை: