ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கவிதைக் காதலி

காலை மலருங்கால் கவிதை மலரும்
காதல் பாட்டுக்கு மெட்டு பிறக்கும்
களத்துமேடு முதல் கடற்கரை வரை
குளத்தங் கரையிலே விரால தேடும்
இல்லாத மாமன் மகளை அழைக்கும்
பொல்லாத மனமே பேராசை தானோ
ஊரோடும் உறவோடும் நாள்முச்சூடும் உரையாடும்
ஊறும் எண்ணங்கள் உருவாக்கும் கற்பனையை
காவியம் படைதத முன்னோரே வழிகாட்டி
ஓவியம் அழகாக தூரிகை ஓட்டம்
இன்பம் வார்த்தைகளில் இதயம் கொட்டும்
துன்பம் துடைப்பதுவே கவிதைக் காதலிதான்

கருத்துகள் இல்லை: