ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஓய்ந்திடும் அந்நாள்

ஓடிய. கால்கள் ஓயும் ஒருநாள்
பாடிய வாயும் மூடிடும் ஒருநாள்
தேடிய செல்வம் தேய்ந்திடும் ஒருநாள்
ஆடிய ஆட்டமும் அடங்கிடும் ஒருநாள்
நாடியும் ஒடுங்கி நலிந்திடும் ஒருநாள்
செடியும் மரமாகி சருகாகும் ஒருநாள்
கொடியும் படர்ந்து காய்ந்திடும் ஒருநாள்
முடியும் இழந்து முதியவராவது ஒருநாள்
கடிது மானிட வாழ்வெனத் தெளிந்திட
நெடிது வளர்ந்து குறுகி நின்று
நாடித் துடிப்பு குறைந்து கூனாகி
பாடிய பட்டினத்தார் பாடல் வரிகள்
ஓடிடும் கண்முன்னே ஓய்ந்திடும் அந்நாள் !

கருத்துகள் இல்லை: