ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சிவராத்திரி

அண்ட பிரமாண்ட சண்ட மாருதம்
கொண்டை முடியுடை ருத்ர தாண்டவம்
அக்னிப் பிழம்பினில் சிந்திடும் வியர்வை
உக்கிரக் கண்கள் உடுக்கை நடனம்
பரவசம் உடலில் பாதங்கள் தாளம்
இரவும் பகலாய் இயங்கும் கோலம்
ஆனந்தக் கூத்தாடும் ஆயிரமாயிரம் உள்ளம்
ஆரவாரம் ஆக்ரோஷம் ஆட்டம் அனைத்தும்
ஓம்ஓம் உச்சரிப்பு வானைப் பிளக்கும்
ஓங்கார நாதம் அண்டம் அதிரும்
சிவமே மனதில் சிந்தனை எல்லாம்
பாவம் போக்கிட பக்தி அறைகூவல்
சிவராத்திரி இன்றாம் பக்தர்கள் கோடி
சிவாலயம் எங்கும் சிறப்பு பூஜைகள்
நமச்சிவாய மந்திரம் நன்மையே நடக்கும்
நர்த்தனமாடும் நாயகன் நடராசனை வனங்குவோம் !

கருத்துகள் இல்லை: