ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ரிட்டயர்மென்ட்

ஐம்பத்து இரண்டு வயசுலே வேலையை விட்டு நாக்பூரிலே இருந்து கிளம்பி சென்னை வந்தப்ப வாழ்க்கையின் வேறு பரிமாணத்த பாக்கப் போறோம்னு நினைக்கலே.
2009 ன் ஆரம்பம். தொழில் அனுபவத்த வச்சு தொழில் தொடங்க நினைச்சு TiN வாங்கி பேர் வச்சு பலரோடு பேசி, நண்பர்களோட கலந்தாலோசித்து, ஆரம்பிக்க நினைத்த எதுவுமே சரியாகப் போகல.
வீட்டிலே உட்காந்தா பைத்தியம் பிடிச்சுடும்னு எண்ணம். ஓடிக் கொண்டே இருந்தவன உக்காருன்னா வீட்டுலே எப்படி முடியும்.
அப்படித்தான் நண்பர் ஜெய்சங்கர் கொடுத்த அட்வைஸ்படி பெங்களூர் ஷாக்கார்நகர்லே பர்னிச்சர் கடை ஆரம்பிச்சது.
நடுவிலே 2010லே மஸ்கட் போய் வேல பாத்து வந்தது. மலேசிய கோலாலம்பூருக்குப் போய் பர்னிச்சர்,திரைச்சீலைங்க,நாவல்டி பொருட்கள் மொத்த வியாபார கடைகளை பாத்துட்டு வந்தது.
2017 வருஷம் பிறக்கர வரை வெவ்வேறு வியாபாரம் செய்ய எத்தனித்து கைவிட்டு போதும் வியாபாரம் நமக்கானது அல்ல என்று விட்டது எல்லாம் முன்னமே கூறியிருக்கேன்.
இந்த ஒன்பது வருடத்துலே சுற்றுலாக்கள் போய் வந்தது அதிகம். கர்நாடகம்,கேரளா,தமிழ்நாடு,கோவா,மகாராஷ்டிரா,குஜராத்னு கார்லே ஆயிரக்கணக்கான கிமீகள் சுற்றி இயற்கை அழகை ரசிக்கற சந்தர்ப்பமும் கார் டிரைவிங் அனுபவமும் வளர்ந்தது.
2017 பிப்ரவரி போல சென்னைக்கு திரும்பவும் வந்தப்போ வீட்டுலே உட்கார முடியாது,வேவைக்குப் போறது நல்லதுனு முடிவெடுத்து வேலைக்குச் சேந்தப்ப ஒரு நிம்மதி.
மூணு வருஷம் ஓடிப்போச்சு சென்னைலே தனிமை வாழ்க்கை. ஆனா இந்த கரோனானு வைரஸ் வந்து இப்படி ஒரு பாடம் கத்துக் கொடுக்கும்னு நினைக்கவே இல்லை.
வீட்டுலே மட்டும் உட்கார வைக்கலே. வெளியே போகாமலே இருக்கவும் வச்சுடுச்சு. 16வது நாள் இன்னைக்கு. எதுவுமே நடக்கறப்ப தான் நம்மாலே இதை ஏத்துக்க முடியுமா இல்லையானு உணர முடியுது. இன்னும் எத்தனை நாளானாலும் சமாளிக்கலாம்னு நம்பிக்கை. இதுவும் கடந்து போகும்.
3 comments
Like
Comment
Share

Comments

View 1 more comment

கருத்துகள் இல்லை: