ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

சொன்னபடி வருவாளா

என்ன‌ பாட்டுப்பாட ஏலேலோ ஐலசா
சொன்னபடி வருவாளா செண்பகம் பொழுதோட
மேகம் கருக்குதடி மேனியெல்லாம் சிலிர்க்குதடி
வேகமாய் வருவாளா வஞ்சகி வடிவழகி
கண்ணெல்லாம் பூத்திருச்சி காத்துக் காத்து
காதகி காணலியே எங்கே சென்றாளோ
கரும்புத் தோட்டத்தில் நீர்பாய்ச்சி நிக்கறேண்டி
சிறுக்கி மவளே சீக்கிரமா வந்திடடி
மாலைச் சூரியன் மறையப் போறாண்டி
மயக்கும் கண்ணழகி மாமனுக்காக வாடிபுள்ளே
புலம்ப விட்டுட்டு போனஇடம் எதுவோடி
புரியலியா என்ஏக்கம் சிங்கார சிரிப்பழகி
பட்டுப் புடவையொன்னும் காலுக்குக் கொலுசும்
பரிசா தருவேன் பாவிமவளே வந்துசேரு

கருத்துகள் இல்லை: