ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

எதுவென்று உரைப்பாயா

அண்ணே சொல்லண்ணே எது பெரியது
அன்பா காதலா அரவணைப்பா கருணையா
கொடியது எதுவென்று சொல்வாயா அண்ணே
வறுமையா முதுமையா நோயா ஊனமா
கடியது எதுவென்று உரைப்பாயா அண்ணே
உழவு நெசவு உருக்காலை கடலோடுதல்
அரியது எதுவாகும் அருமை அண்ணே
செழுமை வளமை புகழ் ஈகை
நெடியது சொல்வாயா மூத்தவனே அண்ணே
மலைமுகடு கோபுரம் மூங்கில் காட்டுமரங்கள்
உரியது கேட்பின் விளம்பிடுவாயா அண்ணே
நிலம் நீர் காற்று ஆகாயம்
விதையிலிருந்து செடியா செடியிலிருந்து விதையா
எண்ணத்தின் வேகத்தை அளந்து சொல்வாயா
வாழ்க்கை விதிவசமா இல்லை மதிவசமா
விடைகள் தெரிந்த பின்னே தமையனே
அழைத்திடு ஆயிரம் பொற்காசு தருவேன் !

கருத்துகள் இல்லை: