ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

நட்பு

எப்பவும் நண்பர்கள் தொடர்பு ரொம்ப முக்கியம்.
சின்ன வயசானாலும் முதியவரானாலும். நம்ம ஒவ்வொருத்தருக்கும் சில நட்புகள் மறக்க முடியாதவை.
ஆறிலிருந்து பதின்மூன்று வயது வரை இராஜேந்திரன், இஸ்மாயில், மூர்த்தி இவங்கள்ளாம். மத்தவங்களோட விளையாடினாலும் நண்பர்களா ஆகலே.
பெண்கள் எல்லாம் வயது குறைவா இருந்ததாலே எங்களோட பழகலே. அதுவில்லாம அப்பலாம் கட்டுப்பாடு அதிகம்.
பதினான்கு வயது முதல் நண்பர்கள் வட்டம் பெரிதானது. பள்ளியில் அதிகமா நட்பு வட்டம் இல்லை. சுகுமார்,இராஜரத்தினம் சில பேரோட நெருக்கம். தமிழ் கிளாஸ்ல ஜி.சுரேஷ். பத்மநாபன்,ரமேஷ்,ராஜன்,நெடுஞ்சேரன்,சார்லஸ்,ரவிச்சந்திரன்,ரமேஷ்குமார் இன்னமும் தொடர்பில். பெயர் விடுபட்டிருந்தால் மன்னிக்கவும்.
குவார்ட்டர்ஸ் குடும்பங்களோடு படித்து முடிக்கும் வரை தொடர்பிருந்தது. குணசேகர்,அவரது மாமா நடராஜன்,இராஜேந்திரன்,மூர்த்தி, அசோக், அந்தோணி, சம்பந்தம், இரவி அம்மா இப்படி குடும்ப நட்புகள் மனம் துவண்டு விடாமல் பல காலம் காத்திருக்கின்றன.இவர்கள் தவிர கணபதி, கிருஷ்ணன் போன்ற பெரியவர்களும்.
கல்லூரி வாழ்க்கையில் சிறு குழுக்களாய் இருந்த நட்பு இப்போது பல்கிப் பெருகியதால் அனைத்து பெயர்களையும் சொல்ல இடமில்லை. சுரேஷூம் கந்தசாமியும் கல்லூரி விடுதியில் இருந்தபோது அடிக்கடி அவர்கள் அறைக்குச் செல்வேன். கந்தசாமியின் அண்ணன் வீட்டில் இரவு ஜாயின்ட் ஸ்டடி, நல்ல கவனிப்பு.
பல நண்பர்கள் என் வீட்டிற்கு வந்துள்ளனர். நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றுள்ளேன். பீச் போவதும் வழக்கம். இப்போதைய அண்ணா சமாதிக்குப் பின்புறம் பெரும்பாலும்.
படிப்பு முடித்து அம்பத்தூர் மார்ஷலில் மைக்கேல், சத்யநாராயணா, பெங்களூரு பீன்யாவில் லஷ்மிபதி, அடிகா, அசோக் லேலண்ட் ஓசூரில் மோகனசுந்தரம்,ஆரோக்யராஜ் பிறகு சென்னை வாசம்.
அட்கோ வால்வ்ஸில் பல நண்பர்கள். இராமன், சுரேஷ் நெருக்கமானாலும் ஒரு பெரிய லிஸ்ட் இருக்கு அவர்களெல்லாம் வாட்ஸப்பிலும் பேஸ்புக்கிலும் தொடர்பிலிருக்கிறார்கள். கோடை செல்வதற்கு ஷியாம்சுந்தர் (பாஸ்) அவரோட சொந்த காட்டேஜ் மிஸ்டி மவுண்டனில் தங்க இரண்டு வருடத்திற்கு ஒருமுறையாவது சுந்தர்,தவே,மனோகர் இவர்களுடன். மயில் மானசீகமாக.
எல் &டி யிலும் பல நண்பர்கள். அட்கோவும் அதனில் சேர்ந்ததே.
ஆலிவர் வால்வ்ஸ், நீகோ ஜெய்ஸ்வால், பிரிட்டிஷ் பெட்ரோலியம் இவையெல்லாம் வேலை செய்த இடங்கள்‌.
தற்போது நண்பன் சுரேஷ் மூலமாக அருண் எக்ஸல்லோவில்.
நட்புகள் பரந்து விரிந்தவை. அவ்வப்போது துவண்டு விடாமல் தாங்குபவை. பல நேரங்களில் வாழ்க்கைப் பாதையில் கூடவே பயணிப்பவை.

கருத்துகள் இல்லை: