ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

யாரம்மா இனியெனக்கு

அன்னையின் குரல் கேட்க ஏங்குவையோ
அவள்மடி மீது தலைவைத்து உறங்குவையோ
வளர்ந்தாலும் சிறுபிள்ளையாய் உணவு ஊட்டுவாளோ
தளர்ந்தாலும் தாயாக தாலாட்ட மறப்பாளோ
உனக்காக உறங்காத விழியொன்று கொண்டாளோ
தனக்காக வாழாத தெய்வமே ஆனாளோ
தமிழூட்டி வளர்த்தவளே தாய்வீடு சென்றாளோ
அமுதூட்டி வளர்த்த கைகள் அசையாதோ
பாலூட்டி சீராட்ட மறுமுறை பிறப்பாளோ
பாராட்ட மகனேயென யாரம்மா இனியெனக்கு

கருத்துகள் இல்லை: