ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

நினைத்தபோது நினைக்குமிடம்

பறவையாய் மாறிட வரம் தருவாயா இறைவா
பறந்து வானில் வலம் வர ஆசை
நீலக் கடலில் நெடுந்தொலைவு பயணித்து தீவொன்றில்
நித்திரை கொள்ள வேண்டும் நிம்மதியாய் கண்மூடி
அமேசான் காடுகளின் அடர்ந்த மரங்களூடே அலையவேண்டும்
அண்டார்டிகாவின் பனிக்காற்றை சுவாசித்து ஆர்டிக் கடல் சேரவேண்டும்
இமயத்தின் சிகரங்களில் இளைப்பாறி எவரெஸ்ட்டை சேரவேண்டும்
ஆகாயத்தின் எல்லைக்கே சென்று. பூமியின் பரிமாணங்கள் காணவேண்டும்
கங்கையில் நீராடி காவிரி நீர்பருகி களைப்பாற வேண்டும்
சகாரா பாலைவனச் சோலைகளில் உலாவி உணவருந்த வேண்டும்
சீனத்துப் பெருஞ்சுவரின் நீண்ட தூரத்தை அளந்திட வேண்டும்
நைல்நதித் தீரத்தில் குளித்து காஷ்மீர் ஆப்பிளை உண்ண வேண்டும்
நினைத்தபோது நினைக்குமிடம் செல்வதற்கும் வரம் வேண்டும்

கருத்துகள் இல்லை: