ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

கானகத்துக் காட்சி

கானகத்துக் காட்சியின்று கண்ணில் தோணுது
யானையொன்று பிளிறி தன்கன்று அழைத்தது
முயலொன்று புதருக்குள்ளே ஓடி மறைந்தது
மயிலொன்று தோகை விரித்து நடனமாடியது
புலியொன்று குளத்து நீரை குடிக்க வந்தது
மானொன்று அதனைக் கண்டு மிரண்டோடியது
குரங்கொன்று மரத்தின் மீது தாவியோடியது
குயிலக்கா கூவியதன் வரவைச் சொன்னது
சிங்கராஜா கர்ஜனையில் காடே அதிர்ந்தது
பஞ்சவர்ணக் கிளியொன்று பழத்தைத் தின்றது
பாம்பைத் தேடி கீரிப்பிள்ளை பாய்ந்தோடியது
முள்ளம்பன்றி உடலைச் சிலிர்த்து உற்றுநோக்கியது
காட்டெருமை கன்றுக்கு பாலைத்தந்து புல்மேய்ந்தது
காட்சிகள் இவையாவும் கண்ணுக்குள் விரிந்தது

கருத்துகள் இல்லை: