மண்ணிலே உதித்தபோது எல்லாமே புதுமை
மழலை மட்டுமே என் மொழியாய்
மதங்கள் தெரியாது அன்னை மடியில்
பெற்றோரை இறைவனோ இயற்கையோ தேர்ந்தது
கற்றவை யாவும் வளர்ந்த பின்னாலே
வர்ணங்கள் யாருக்காக வகுத்தவன் எவன்
வானமே எல்லை நாட்டின் எல்லையில்லை
பறவைகள் பறந்து கண்டம் கடக்கின்றன
உறவுகள் தேடி கூட்டைத் துறக்கின்றன
சுதந்திரக் காற்றை தினமும் சுவாசிக்கின்றன
எதனால் இத்தனை வன்மம் மானிடா
என்னையேனும் மறுபடி கருவிலே சேர்த்திடுவாயா
வஞ்சக உலகில் வாழ்ந்தது போதும்
வேறோரு உலகில் பிறக்கக் காத்திருப்பேன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக