ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

பெண்ணின் உலகம்

பெண்ணெனப் பிறந்த பேரணங்கே
தினமும் உன்நாளே இன்றுமட்டுமில்லை
கண்ணயரா முதிர்இரவுகள் தினமும்
காலை‌ மாலை இரவு விடியல்
ஓய்வில்லா உனதுழைப்பு யார்செய்வார்
ஒருகோடி பொற்காசும் ஈடில்லை
தாயாய் சேயாய் மனைவியாய்
தாங்கிடும் அன்புக்கு இணையேது
தனதென்ற சுயநலம் உனக்கில்லை
கருவிலே தொடங்கி கல்லறைவரை
கணக்கில்லை உனதன்பின் எல்லை
காணக் கிடைக்காத மாதரசே
கண்ணிலே நீரென்றால் உனக்காகவே
நீயில்லா உலகொன்றில் வாழ்வில்லை
நித்தமும் பெண்மை போற்றுவோம்
பெண்தினமல்ல பெண்ணின் உலகம்
உன்னாலே உயிர் கண்டேன் !

கருத்துகள் இல்லை: