இதமாய் உறவாடி இணைவோம் யாவரும்
மொழியென்றும் நிறமென்றும் வேற்றுமை பாரோம்
மொத்தமாய் சாதியைக் குழிதனில் புதைப்போம்
குலமென்றால் மனித குலமென்ற ஒன்றே
குடிசையும் கோபுரமாய் மாறும் வரும்நாளில்
பிரிவினை பேசும் எவரும் பிசாசுகளே
கருப்பண்ண சாமி கணபதி கலைமகள்
கடவுளரே அல்லா இயேசு எவரும்
படைத்தவனைப் படைத்ததே மனிதர் நாமே
படைத்ததனை அழிக்க நினைப்பதும் நாமே
ஆக்கலும் அழித்தலும் ஆண்டவன் செயல்
காக்க மட்டுமே உரிமை நமக்கு
பேதமைச் செயல்கள் விடுத்து ஒழித்து
பெருமை சேர்ப்போம் மனித குலத்திற்கு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக