பெத்தவ பாலூட்டி வளத்து விட்டா
நித்தமுமா தாலாட்டி தூங்க வச்சா
கரிசனமா சமைச்சு அன்னத்த ஊட்டினா
கருப்போ சிவப்போ கொஞ்சினா அணைச்சா
அம்மா அன்புலே கலப்படமே இல்ல
தத்தி நடபோட்டு வளந்த புள்ள
புத்திய சேத்துவச்சு பட்டம் வாங்குச்சு
காசு சம்பாதிக்க எங்கெங்கோ போச்சு
மாசு மனசுலே மெதுமெதுவா ஏறுச்சு
பித்தம் தலைக்கேற பெத்தவள மறந்துச்சு
சுத்தமா உறவுகள மறந்து பறந்துச்சு
மகன் வருவான்னு கண்சுருங்கி கிழவியிங்கே
மனசு படபடக்க புலம்பி தீத்துச்சு
இன்னைக்கோ நாளைக்கோ விடிஞ்சதும் வருவானோ
இல்லை இறந்த உடல பாக்க ஓடிவருவானா !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக