சனி, 18 ஏப்ரல், 2020

இனிவரும் நாட்கள்

நாட்காட்டியின் கடைசித்தாளை கிழித்தபோது
நாமும் கடந்த ஆண்டுகள் நினைவில்
நன்றி சொல்ல வார்த்தைகள் அறியேன்
இயற்கை முதல் இறைவன் வரையிலும்
இன்னல் நீங்கி இன்பம் வரையிலும்
உற்றவள் மற்றும் உறவுகள் அனைத்தும்
பெற்றவர் மற்றும் பேணிக் காத்தவர்
நட்புக்கு என்றும் இல்லை எல்லை
நல்லாசிரியர் நம்மோடு பணிபுரிந்த நல்லோர்
நாலும் கற்பித்த நல்ல நூல்கள்
நானில மக்கள் நாடுதோறும் நண்பர்கள்
நிமடங்கள் மணிகளாய் நாட்களாய் ஆண்டுகளாய்
நிதம் நிதம் வாழ்ந்த வாழ்க்கை
அனைத்தும் வணங்கி அடுத்து வரும்நாட்களில்
அன்போடு அரவணைக்கும் ஆற்றல் வேண்டும்
இன்றோ நாளையோ கூற்றுவன் கணக்கில்
இன்புற்றிருக்க மட்டுமே இனிவரும் நாட்கள் !

கருத்துகள் இல்லை: