சனி, 18 ஏப்ரல், 2020

காலம் மாறும்

காலத்தின் விளையாட்டு ஆரம்பம் இப்போது
கோலமிட்டுப் பார்க்க ஊழ்வந்து சேர்ந்தது
புரிந்தே எழுதிய நானும் இப்போது
புரியாத புதிராய் உணர்ந்தேன் மனதில்
அமைதிப்பூங்கா போர்க்களமாய் மாறிப் போனது
அழிவுப் பாதைக்கு வழியோ நானறியேன்
குற்றம் யார்மீதோ பிணக்குழிகள் பிழைத்தன
குரல்வளைகள் நசுக்கவும் கூக்குரல்கள் ஓலமாகவும்
யாரிடம் நான்சொல்வேன் எவருக்கும் செவியில்லை
ஓரிடம் உண்டு அனைவர்க்கும் இறுதியென்று
தர்மம் என்றும் வெல்லும் உறுதியாக
தளராமல் இருப்பாய் நெஞ்சே காலம்மாறும்

கருத்துகள் இல்லை: