ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

மாமன் மகளே

களத்து மேட்டுலே களைச்ச வேளையிலே
குளத்து நீருலே முகத்த கழுவியே
மரத்து நிழலுலே மல்லாக்க படுக்கையிலை
மாமோய்னு குரல கேட்டு பாக்கையிலே
சும்மாடு தலையிலே கூழ்ப்பானை சுமந்து
எம்மாமன் மகளே வாடி புள்ளே
பக்கத்துலே வந்து சொம்புலே கூழும்
பச்சை மாங்கா பத்தையும் கொடுக்க
அவளப் பாத்தபடி குடிக்கற எனக்கு
அமிர்தமா இருக்குமய்யா அடங்கிடும் பசியும்
அருகாமை அவள் இருக்க அவ்விடம்
சொர்க்கமாய் மாறிநின்று சோர்வு தொலஞ்சிடுமே

கருத்துகள் இல்லை: