சனி, 18 ஏப்ரல், 2020

புதிய தினமே

விடியும் ஒவ்வொரு நாளும் புதிய தினமே
கடிதில் மறையும் ஒவ்வொரு மணித் துளியும்
கதிரவன் வரவில் புத்துணர்ச்சி பெற்றிடும் உயிரினங்கள்
கதிர்களும் நெல்மணிகள் சுமந்து வளைந்து ஆடும்
நேற்றைய இரவின் பனித்துளிகள் மெல்ல மறையும்
நேர்த்தியாய் வண்ணத்துப் பூச்சி மலர்களில் தாவும்
காட்டுக் குயிலின் பாட்டுச் சத்தம் பரவசமூட்டும்
கூட்டைத் துறந்த பறவைகள் பயணம் தொடங்கும்
காற்றின் குளிரில் கதகதப்பு மெல்லமெல்ல சூடேற்றும்
காகம் கரைய கிளிகள்் கீச்சிட வானில்பறக்கும்
மேகக் கூட்டம் சிகரம் தழுவிப் பயணிக்கும்
மேற்கே தொடங்கி கிழக்காய் பாயும் ஆற்றுநீரும்
கடலின் அலைகள் கால்களைக் கழுவித் திரும்பும்
கற்பனைத் தேரில் கவிதைகள் உங்களைச் சேரும் !

கருத்துகள் இல்லை: