பிறப்புக்கும் இறப்புக்கும் இடைவெளி சிறிதே
மறப்பது ஏனோ மனிதனின் மனமே
இருப்பது சிலநாள் இனியது மறுப்பதேன்
இரத்தம் சிவப்பே சதையொரு பிண்டமே
இறைவனின் பெயரால் கூக்குரல் எதனால்
மறைகள் அனைத்தும் நல்லவை சொல்பவை
இடையினில் தோன்றும் செருகல் எவரால்
நடையினில் தளர்வு வரும்வரை பிரிவோ
சொர்க்கமோ நரகமோ அவரவர் வினைப்பயன்
வர்க்கம் பிரித்து வசைபாடுதல் முறையோ
என்றும் நல்லதே நினைத்திடு செய்திடு
எவரையும் நண்பராய்ப் பார்க்கக் கற்றிடு !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக