சனி, 18 ஏப்ரல், 2020

யாதும் ஊரே யாவரும் கேளிர்

என்றாவது ஒருநாள் மாறிடுமா சமுதாயம்
எண்ணியே நாட்கள் பலநூறு கடந்தன
ஏனிந்த சகிப்பின்மை பொறாமை ஒவ்வாமை
ஏனோ பகைமை பழிநோக்கம் புரியவில்லை
இறைவன் படைப்பினில் தவறென்று கொள்வதா
இல்லையில்லை இவர்தம் வளர்ப்பில் தவறா
தூய்மைப் படுத்த கருவியொன்று உண்டா
தாய்மை உணர்வைத் தழுவினாலே போதுமன்றோ
சகோதரம் சமாதானம் இரக்கம் அன்பு
சமத்துவம் சகிப்பு பொறுமை கருணை
நற்குணங்கள் நம்மிடையே மறைந்து போனதா
பொற்காலம் ஒன்று மீண்டும் வருமா
யாதும் ஊரே யாவரும் கேளிர்
இதுவே வேதமாய் ஒலிக்குமா எங்கெங்கும் ?

கருத்துகள் இல்லை: