தேடிநிதம் நிம்மதியை ஓடி நின்றாயே
கோடிகோடியாய் பணம்பார்த்து நகைத்தாயே
வாடிநின்ற வறியவர்க்குத் தரமறுத்தாயே
கூடிநின்று கும்பலோடு கும்மாளமிட்டாயே
செடிகொடிகள் அழித்தங்கே மாளிகையாக்கி்
கடிவாளமில்லா புரவியென கபடம்புரிந்தாயே
நாடிநரம்பெல்லாம் முறுக்கேற்றிக் களித்தாயே
நல்லதென்று நானிலத்தில் செய்தாயா
பொல்லாத நோயொன்று வந்ததின்று
சொல்லாமல் உனைஅணத்து வீழ்த்தியது
ஆடியஆட்டமெங்கே மனிதா அடங்கினாயா
உயரப்பறந்ந நீஉயிர்வாழத் துடிப்பதேனோ
வாழ்வதும் வாழ்விப்பதுவும் உணர்ந்தாயா
நல்லதேநினை நல்லதே நடக்கும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக