மலையரசி மடிதனிலே உறங்கும் நேரம்
கலையழகே கண்ணுக்கு இனிய காட்சியுமே
கடுங்குளிரும் கதகதப்பும் கலந்தே உறக்கம்
நடுங்கும் பனிப்பொழிவு புறத்தே விட்டுவிட்டு
தூரத்தே தெரியும் ஏரிநீர் மலைமுகடு
நேரத்தே எழுவதெங்கே குளிரின் அணைப்பில்
ஆதவன் எழுமுன்னே ஆயிரம் கிரணங்கள்
ஆகாய வெளியில் வண்ணப் பூச்சாய்
இயற்கையின் சித்து விளளையாட்டில் இளைப்பாறி
இன்றும் நாளையும் மனங்குளிர மகிழ்வோம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக