ஞாயிறு, 19 ஏப்ரல், 2020

ஆயிரம் கிரணங்கள்

மலையரசி மடிதனிலே உறங்கும் நேரம்
கலையழகே கண்ணுக்கு இனிய காட்சியுமே
கடுங்குளிரும் கதகதப்பும் கலந்தே உறக்கம்
நடுங்கும் பனிப்பொழிவு புறத்தே விட்டுவிட்டு
தூரத்தே தெரியும் ஏரிநீர் மலைமுகடு
நேரத்தே எழுவதெங்கே குளிரின் அணைப்பில்
ஆதவன் எழுமுன்னே ஆயிரம் கிரணங்கள்
ஆகாய வெளியில் வண்ணப் பூச்சாய்
இயற்கையின் சித்து விளளையாட்டில் இளைப்பாறி
இன்றும் நாளையும் மனங்குளிர மகிழ்வோம்

Image may contain: sky, twilight, outdoor and nature

கருத்துகள் இல்லை: